சோழர் செப்பேடுகள் -5
தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி எண் 3 ல் .. 213 மற்றும் 212 ஆம் எண் சாசனமாக இவ்விரண்டு செப்பேடு விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளன. பதிப்பித்தவர் H.கிருஷ்ணசாஸ்திரி. திருச்செங்கோடு முத்துச்சுவாமி அவர்களிடமிருந்து தனக்கு இந்த செப்பேடு கிடைத்ததாகவும், விபரங்களை படியெடுத்தபிறகு அவரிடமே இச்செப்பேட்டை ஒப்படைத்தாகவும் சாஸ்திரி எழுதியுள்ளார்.
இந்த செப்பேட்டில் இலட்சினை இல்லை. முழுவதும் தமிழ் எழுத்துக்களில்
எழுதப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில கிரந்த எழுத்துக்கள் மட்டும் உள்ளது.
முதல் செப்பேடு, இராசகேசரி வர்மனின் 5 ஆம் ஆண்டு. இந்த இராசகேசரி இராஜராஜன் என்பதாக சாஸ்திரி எழுதியுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ராசகேசரி என்பது சுந்தரச்சோழனே என்று முடிவு செய்துள்ளனர்.
5ம் ஆட்சியாண்டு என்பதால் செப்பேட்டின் காலம் கி.பி. 962.
முதல் செப்பேட்டுத்
தொகுதயில் மூன்று ஏடுகள் உள்ளன.
தூசியூரில் எழுந்தருளியிக்கும் திருமூலஸ்தானமுடைய பரமேச்வரனுக்கு பஞ்சமாசப்தம் கொட்டும் உவச்சர்களுக்கு, கொல்லி மழவனான ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் என்பவர் நிலதானம் வழங்கும் விபரங்கள் இச்செப்பேட்டில் உள்ள முக்கியப் பகுதியாகும்.
இரண்டாம் செப்பேடு ஒரே ஒரு பட்டை மட்டும் கொண்டதாக உள்ளது. இது இராசகேசரியான சுந்தரச்சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. இரண்டு தனித்தனி ஆவணங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளன..
முதல் ஆவணம், தூசியூரில் வாங்கப்படும் வீட்டுவரிகளை நிலைநிறுத்துவது குறித்து விபரங்கள்..
இரண்டாம் ஆவணம், ஈழத்துபட்ட கொல்லி மழவன் பிரதிகண்டவர்மன் சுந்தரச்சோழனின் தந்தையின் தாகசாந்திக்காக வழங்கப்பட்ட தானம் குறித்த செய்திகள்.
இச்செப்பேட்டின் மூலம் நாம் அறியும் ஒரு வரலாற்றுத்தகவல்..
சுந்தரச்சோழனின் 9 ம் ஆட்சியாண்டில்.. ஈழப்போர் ஒன்று நடைபெற்றது. அப்போரில் கலந்து கொண்ட கொடும்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளான் இறந்தார். இச் செய்தியை திருவெண்காடு கல்வெட்டு பதிவுசெய்கிறது. இப்போரிலே கொல்லி மழவனும் கலந்து கொண்டு இறந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து..
கொல்லிமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசர்கள், கொல்லி மழவர்கள் மற்றும் மழவரையன் என அழைக்கப்பட்டனர்.
தொடர்வோம்..
எழுத்து ; மா.மாரிராஜன்.
Refrence ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.
S.i.i. vol 3. No. 212 & 213.
முதல் செப்பேடு, இராசகேசரி வர்மனின் 5 ஆம் ஆண்டு. இந்த இராசகேசரி இராஜராஜன் என்பதாக சாஸ்திரி எழுதியுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த ராசகேசரி என்பது சுந்தரச்சோழனே என்று முடிவு செய்துள்ளனர்.
5ம் ஆட்சியாண்டு என்பதால் செப்பேட்டின் காலம் கி.பி. 962.
முதல் செப்பேட்டுத்
தொகுதயில் மூன்று ஏடுகள் உள்ளன.
தூசியூரில் எழுந்தருளியிக்கும் திருமூலஸ்தானமுடைய பரமேச்வரனுக்கு பஞ்சமாசப்தம் கொட்டும் உவச்சர்களுக்கு, கொல்லி மழவனான ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் என்பவர் நிலதானம் வழங்கும் விபரங்கள் இச்செப்பேட்டில் உள்ள முக்கியப் பகுதியாகும்.
இரண்டாம் செப்பேடு ஒரே ஒரு பட்டை மட்டும் கொண்டதாக உள்ளது. இது இராசகேசரியான சுந்தரச்சோழனின் 10 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. இரண்டு தனித்தனி ஆவணங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளன..
முதல் ஆவணம், தூசியூரில் வாங்கப்படும் வீட்டுவரிகளை நிலைநிறுத்துவது குறித்து விபரங்கள்..
இரண்டாம் ஆவணம், ஈழத்துபட்ட கொல்லி மழவன் பிரதிகண்டவர்மன் சுந்தரச்சோழனின் தந்தையின் தாகசாந்திக்காக வழங்கப்பட்ட தானம் குறித்த செய்திகள்.
இச்செப்பேட்டின் மூலம் நாம் அறியும் ஒரு வரலாற்றுத்தகவல்..
சுந்தரச்சோழனின் 9 ம் ஆட்சியாண்டில்.. ஈழப்போர் ஒன்று நடைபெற்றது. அப்போரில் கலந்து கொண்ட கொடும்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளான் இறந்தார். இச் செய்தியை திருவெண்காடு கல்வெட்டு பதிவுசெய்கிறது. இப்போரிலே கொல்லி மழவனும் கலந்து கொண்டு இறந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து..
கொல்லிமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசர்கள், கொல்லி மழவர்கள் மற்றும் மழவரையன் என அழைக்கப்பட்டனர்.
தொடர்வோம்..
எழுத்து ; மா.மாரிராஜன்.
Refrence ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.
S.i.i. vol 3. No. 212 & 213.