சோழர் செப்பேடு -3
வேளஞ்சேரி செப்பேடு.
முதலாம் பராந்தகன்.
கி.பி. 932.
6.10.1977 ஆம் வருடம்.
திருத்தணி அருகே உள்ள வேளஞ்சேரி என்னும் கிராமத்தில் உள்ள ஒருபள்ளிக்கூடம். பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது புதைந்திருந்த சிலைகள் சிலவற்றைக் கண்டார்கள். விடயம் அறிந்து வந்த தொல்லியல் துறையினர் அங்கே கிடந்தவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் இயக்குநர் இரா.நாகசாமியின் மேற்பார்வையில் திரு.நடன காசிநாதன் அவர்கள் அந்த பள்ளிக்குச் சென்று அங்கே கிடைத்த பொருட்களை பார்வையிட்டார். அதில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேட்டுத் தொகுதிகள் இருந்தன.
பராந்தகச்சோழரின் செப்பேடு ஒன்று. அபராஜிதப் பல்லவரின் செப்பேடு ஒன்று.
பராந்தகனின் செப்பேடு வேளஞ்சேரி செப்பேடு என்றும், அபராஜிதனின் செப்பேடு திருத்தணிச் செப்பேடு என்றும் தொல்லியல் துறையால் அழைக்கப்பட்டன.
இந்த செப்பேடுகளில் காணப்படும் விபரகளை திரு. நாகசாமி அவர்கள், திருத்தணி மற்றும் வேளஞ்சேரி செப்பேடுகள் என்னும் தலைப்பில் தொல்லியல் துறை வெளியீடாக ஒரு நூலை வெளியிட்டார்.
வேளஞ்சேரி செப்பேடு ஐந்து பட்டைகளைக் கொண்டது. பட்டைகளின் இருபுறமும் எழுத்துக்கள் உள்ளன. இப்பட்டைகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு வளையத்தின் முகப்பில் இலச்சினை உள்ளது.
வட்ட வடிவமான இலச்சினையில் சோழர்களின் முத்திரை.
இரு மீன்களின் முன் ஒரு புலி அமர்ந்துள்ளது.
இரு புறமும் இரு விளக்குத் தாங்கிகள் உள்ளன. மேலே குடைகளும் சாமரங்களும் உள்ளது.
மொத்த அமைப்பின் கீழ் வில் ஒன்று படுக்கை வசமாக உள்ளது.. இலச்சினையின் விளிம்பில் கிரந்த எழுத்தில் சுலோகம் உள்ளது.
" ஸ்ரீமத் சந்ரந்த்யதேரேவ
சோளம்ஸ ஸ்ரீகாமணே |
சாஸனம் சோளபூபர்த்து பரகேசரி வர்ம்மண||
" சந்திரனை போன்ற ஒளி கொண்டவனும் சோழத்தின் தலையிற் சூடும் மணியை போன்றவனுமான பரகேசரிவர்மனின் சாசனம். "
செப்பேட்டின் முதல் பகுதியில் 29 வரிகள் வடமொழியிலும், இரண்டாம் பகுதியில் 48 வரிகள் தமிழிலும் உள்ளன.
முதலாம் பராந்தகளிள் 25 ஆம் ஆட்சியாண்டில் இச் செப்பேடு வெளியிடப்பட்டது.
மேலிருஞ்சேரு என்னும் கிராமத்தைச் சேர்ந்த அந்தணர்களுக்கு நிலம் வழங்கிய அரசனின் ஆணைதான் இச் செப்பேடு..
முதல் பகுதியில் மங்கல வாழ்த்தோடு துவங்குகிறது..
செய்யுள் 1-7
திருமால் வாழ்த்து. திருமாலின் நாபியில் உதித்த பிரம்மா. அவருக்கு பின் மரீசி. அவருக்கு மகனாக கச்யபர். அவருக்குப்பின் சூரியதேவர். இக்குலத்தில் உசிநரன் என்னும் மன்னன் பிறந்தான். சோழர்குலத் திலகம் சிபி பிறந்தான். அக்னித்தேவன் அவனை சோதிக்கும் பொருட்டு பருந்தாக வந்தபோது, தன் சதையை பருந்துக்குக் கொடுத்து புறாவைக் காத்தான்.
செய்யுள் 8 -
பனிமலையின் தடத்தை பதித்தவனும், காவிரியை இரு கரைக்குள் அடக்கியவனுமான கரிகாலன் அக்குலத்தில் பிறந்தான்.கரிகாலனது ஆணையால் காஞ்சியில் மேகத்தைத் தொடும் மாளிகைகள் உண்டாயிற்று.
செய்யுள் - 9
சிலந்தியின் தியாகத்தால் உவகை கொண்ட சிவன் அதை சோழர் மரபில் மன்னனாக பிறக்கச் செய்தார். கோச்செங்கண்ணான் என்னும் பெயரில் சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்தது.
செய்யுள். 10 - 15
அந்தக் குலத்தில் ஒற்றியூரன் என்பவன் பிறந்தான். அவனுக்கு, எதிரிகளாகிய தொடர்களுக்கு காட்டுத்தீயானவன் ( விஜயாலயன்) பிறந்தான். அவனுக்கு குபேரனுக்கு சமமான பெருமையுடைய ஆதித்தன் பிறந்தான். ஆதித்தனிடமிருந்து எதிரிகளுக்கு கூற்றுவன் போல் பராந்தகன் தோன்றினான். அவன் இராமேஷ்வரம் ,கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம், இவற்றில் தன் வீரத்தால் கொண்டுவரப்பட்ட தங்கத்தைக் கொண்டு துலாபாரம் ஏறினான்.
செய்யுள் 16 - 17
ப்ரம்மவிருத்திராசன் வேண்டுகோள் விட, கிளிநல்லூரைச் சேர்ந்த சர்வதேவன் என்பவன் இச்சாசனத்தின் ஆணத்தி ஆவான். தானத்தை பராந்தகச் சோழன் நீர் வார்த்து பக்தியோடு அளித்தான். உருத்சன் என்னும் பெயரையுடையவன் இச்சாசனத்தைச் செய்தான். இந்த தர்மத்தை காக்க வேண்டி வீரசோழன் யாசிக்கிறான்..
அடுத்து..
தமிழ்ப்பகுதியில் தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் வரையறைகள் குறிக்கப்பட்டுள்ளன.
இச்செப்பேட்டில் நமக்குக்கிடைக்கும் சில அவசியத்தரவுகள்.
கரிகாலன் இமயமலையில் தடம்பதித்த செய்தி. காவிரியாற்றுக்கு கரை எழுப்பியது. காஞ்சியில் மாளிகைகள் எடுத்தது.
கோச்செங்கணானின் முற்பிறப்பான சிலந்தி வரலாறு. விஜயாலனின் தந்தை பெயர் ஒற்றியூரன்..
தொடர்வோம்...
எழுத்து: மா.மாரிராஜன்.
Refrence ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.
வேளஞ்சேரி செப்பேடு.
முதலாம் பராந்தகன்.
கி.பி. 932.
திருத்தணி அருகே உள்ள வேளஞ்சேரி என்னும் கிராமத்தில் உள்ள ஒருபள்ளிக்கூடம். பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது புதைந்திருந்த சிலைகள் சிலவற்றைக் கண்டார்கள். விடயம் அறிந்து வந்த தொல்லியல் துறையினர் அங்கே கிடந்தவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் இயக்குநர் இரா.நாகசாமியின் மேற்பார்வையில் திரு.நடன காசிநாதன் அவர்கள் அந்த பள்ளிக்குச் சென்று அங்கே கிடைத்த பொருட்களை பார்வையிட்டார். அதில் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேட்டுத் தொகுதிகள் இருந்தன.
பராந்தகச்சோழரின் செப்பேடு ஒன்று. அபராஜிதப் பல்லவரின் செப்பேடு ஒன்று.
பராந்தகனின் செப்பேடு வேளஞ்சேரி செப்பேடு என்றும், அபராஜிதனின் செப்பேடு திருத்தணிச் செப்பேடு என்றும் தொல்லியல் துறையால் அழைக்கப்பட்டன.
இந்த செப்பேடுகளில் காணப்படும் விபரகளை திரு. நாகசாமி அவர்கள், திருத்தணி மற்றும் வேளஞ்சேரி செப்பேடுகள் என்னும் தலைப்பில் தொல்லியல் துறை வெளியீடாக ஒரு நூலை வெளியிட்டார்.
வேளஞ்சேரி செப்பேடு ஐந்து பட்டைகளைக் கொண்டது. பட்டைகளின் இருபுறமும் எழுத்துக்கள் உள்ளன. இப்பட்டைகள் ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டு வளையத்தின் முகப்பில் இலச்சினை உள்ளது.
வட்ட வடிவமான இலச்சினையில் சோழர்களின் முத்திரை.
இரு மீன்களின் முன் ஒரு புலி அமர்ந்துள்ளது.
இரு புறமும் இரு விளக்குத் தாங்கிகள் உள்ளன. மேலே குடைகளும் சாமரங்களும் உள்ளது.
மொத்த அமைப்பின் கீழ் வில் ஒன்று படுக்கை வசமாக உள்ளது.. இலச்சினையின் விளிம்பில் கிரந்த எழுத்தில் சுலோகம் உள்ளது.
" ஸ்ரீமத் சந்ரந்த்யதேரேவ
சோளம்ஸ ஸ்ரீகாமணே |
சாஸனம் சோளபூபர்த்து பரகேசரி வர்ம்மண||
" சந்திரனை போன்ற ஒளி கொண்டவனும் சோழத்தின் தலையிற் சூடும் மணியை போன்றவனுமான பரகேசரிவர்மனின் சாசனம். "
செப்பேட்டின் முதல் பகுதியில் 29 வரிகள் வடமொழியிலும், இரண்டாம் பகுதியில் 48 வரிகள் தமிழிலும் உள்ளன.
முதலாம் பராந்தகளிள் 25 ஆம் ஆட்சியாண்டில் இச் செப்பேடு வெளியிடப்பட்டது.
மேலிருஞ்சேரு என்னும் கிராமத்தைச் சேர்ந்த அந்தணர்களுக்கு நிலம் வழங்கிய அரசனின் ஆணைதான் இச் செப்பேடு..
முதல் பகுதியில் மங்கல வாழ்த்தோடு துவங்குகிறது..
செய்யுள் 1-7
திருமால் வாழ்த்து. திருமாலின் நாபியில் உதித்த பிரம்மா. அவருக்கு பின் மரீசி. அவருக்கு மகனாக கச்யபர். அவருக்குப்பின் சூரியதேவர். இக்குலத்தில் உசிநரன் என்னும் மன்னன் பிறந்தான். சோழர்குலத் திலகம் சிபி பிறந்தான். அக்னித்தேவன் அவனை சோதிக்கும் பொருட்டு பருந்தாக வந்தபோது, தன் சதையை பருந்துக்குக் கொடுத்து புறாவைக் காத்தான்.
செய்யுள் 8 -
பனிமலையின் தடத்தை பதித்தவனும், காவிரியை இரு கரைக்குள் அடக்கியவனுமான கரிகாலன் அக்குலத்தில் பிறந்தான்.கரிகாலனது ஆணையால் காஞ்சியில் மேகத்தைத் தொடும் மாளிகைகள் உண்டாயிற்று.
செய்யுள் - 9
சிலந்தியின் தியாகத்தால் உவகை கொண்ட சிவன் அதை சோழர் மரபில் மன்னனாக பிறக்கச் செய்தார். கோச்செங்கண்ணான் என்னும் பெயரில் சிலந்தி சோழ மன்னனாகப் பிறந்தது.
செய்யுள். 10 - 15
அந்தக் குலத்தில் ஒற்றியூரன் என்பவன் பிறந்தான். அவனுக்கு, எதிரிகளாகிய தொடர்களுக்கு காட்டுத்தீயானவன் ( விஜயாலயன்) பிறந்தான். அவனுக்கு குபேரனுக்கு சமமான பெருமையுடைய ஆதித்தன் பிறந்தான். ஆதித்தனிடமிருந்து எதிரிகளுக்கு கூற்றுவன் போல் பராந்தகன் தோன்றினான். அவன் இராமேஷ்வரம் ,கன்னியாகுமரி, ஸ்ரீரங்கம், இவற்றில் தன் வீரத்தால் கொண்டுவரப்பட்ட தங்கத்தைக் கொண்டு துலாபாரம் ஏறினான்.
செய்யுள் 16 - 17
ப்ரம்மவிருத்திராசன் வேண்டுகோள் விட, கிளிநல்லூரைச் சேர்ந்த சர்வதேவன் என்பவன் இச்சாசனத்தின் ஆணத்தி ஆவான். தானத்தை பராந்தகச் சோழன் நீர் வார்த்து பக்தியோடு அளித்தான். உருத்சன் என்னும் பெயரையுடையவன் இச்சாசனத்தைச் செய்தான். இந்த தர்மத்தை காக்க வேண்டி வீரசோழன் யாசிக்கிறான்..
அடுத்து..
தமிழ்ப்பகுதியில் தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் வரையறைகள் குறிக்கப்பட்டுள்ளன.
இச்செப்பேட்டில் நமக்குக்கிடைக்கும் சில அவசியத்தரவுகள்.
கரிகாலன் இமயமலையில் தடம்பதித்த செய்தி. காவிரியாற்றுக்கு கரை எழுப்பியது. காஞ்சியில் மாளிகைகள் எடுத்தது.
கோச்செங்கணானின் முற்பிறப்பான சிலந்தி வரலாறு. விஜயாலனின் தந்தை பெயர் ஒற்றியூரன்..
தொடர்வோம்...
எழுத்து: மா.மாரிராஜன்.
Refrence ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.
No comments:
Post a Comment