வரலாற்றுத் தொன்மைகள் - 2
(செய்தி மற்றும் படங்கள் : திரு.சரவண ராஜா)
விளாப்பாக்கம், பஞ்சபாண்டவர் குடைவரை கோயில்:
ஆற்காடுபேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள து பஞ்ச பாண்டவர் மலை, ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு சிறிய கிராமம் விளாப்பாக்கம். இந்த மலைப்பகுதி 8 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு செழுமையான சமண மையமாக இருந்துள்ளது. இது பாறைக் குடைவரை கோவில், சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளுடன் கூடிய இயற்கை குகைகளும் மலை மேல் அமைந்துள்ளன.
பல்லவ பாணியில் குடையப்பட்ட மிகப்பெரிய குகைக்கோயில். இந்த கிழக்கு முகம் குகை ஒரு பெரிய மலை அடிவாரத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. இந்தக் குகைக் கோபுரங்கள் வரிசையாக பன்னிரண்டு தூண்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மேல்மட்டத்தில் ஒரே சதுரமாக இருக்கும். தூண்கள் மற்றும் விமானங்கள் மேலே வளைந்த கோள்களும் உள்ளன. பக்க சுவர்கள் சதுர வடிவ செதுக்கப்பட்ட தொகுதிகள் கொண்டவை.
இங்கே உள்ள கல்வெட்டுப்படி, இந்த மலை திருப்பன்மலை என்று குறிப்பிடப்படுகிறது, யக்ஷி, நாகநதி மற்றும் ஜைன தீர்த்தங்கர் ஆதிநாதர் பற்றிய குறிப்புகள் உள்ளன. யக்ஷியின் உருவம் ஒரு பெரிய பாறையில் நீர் உள்ளடக்கிய குளம் அருகில் உள்ளது. குகையில் சமண படுக்கைகள் வெட்டப்பட்டடுள்ளன, யக்ஷி ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பார், யக்ஷியைச் சுற்றி நான்கு பேர் உள்ளனர்.
யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலை பாறை மேல் காணப்படுகிறார். ஒரே பாறையில் தெற்கு முகத்தில் இரண்டு செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள் நிர்வாண சமணர்உருவம் மற்றும் ஒரு விலங்கை பார்க்கிறோம்.17ம் நூற்றாண்டில் இங்கே மலை மீது தங்கிய முஸ்லீம் துறவி குடும்ப கல்லறைகளும் அமைந்துள்ளன.
இந்த பெரியபாறையில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன, பல்லவ மன்னன் நந்திவர்மன் மற்றும் சோழ அரசர் இராஜராஜர் இங்கே வசித்த சமண துறவிகளுக்கு அளித்த தானங்கள் பற்றிய அறிய தகவல்கள் அடுத்த பதிவில் !